Published : 23 Oct 2017 06:31 PM
Last Updated : 23 Oct 2017 06:31 PM
காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், ''காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா இதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1979-வது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சர்மா, 2014- 16 வரை உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றியவர். காஷ்மீர் தலைவர்கள் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.
இந்த முன்னெடுப்பு பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து செயலாக்கத்துக்கு வந்துள்ளது'' என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT