Published : 02 Oct 2017 06:23 AM
Last Updated : 02 Oct 2017 06:23 AM

மாவோயிஸ்ட்களை ஒடுக்கும் வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஒடுக்கவும் அவர்களது முயற்சிகளை முறியடிக்கவும் பணியாற்றி வருகின்றனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் தனோரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவினர் மற்றும் மாவட்ட போலீஸார் சார்பில் நடந்த ஆயுத பூஜை விழாவில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மகாராஷ்டிராவின் கட்சிரோலி உட்பட நாட்டின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் செயல்படுகின்றனர். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். நக்சலைட் இயக்கத்தை அடக்கி ஒடுக்கவும் அவர்களது முயற்சிகளை முறியடிக்கவும் போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையிலேயே ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன்’’ என்றார்.

சாலையில் துப்புரவு

பின்னர், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை பற்றிய விழிப்புணர்வு திட்டத்தை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தொடங்கி வைத்தார். அமைச்சரும் சிஆர்பிஎப், போலீஸ் அதிகாரிகளும் துடைப்பத்தால் சாலையை சுத்தம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும் அதிகாரிகளும் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x