காவிரியில் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திற‌ப்பு

காவிரியில் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திற‌ப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை பெய்வதால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

க‌பினி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 719 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 6 ஆயிரத்து 85 கன அடி நீர் திறந்துவிட‌ப்பட்டுள்ள‌து.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 109.84 அடியாக (மொத்த அடி 124.80) உயர்ந்திருக்கிறது.

அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 995 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 7 ஆயிர‌த்து 876 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரம் கன அடி நீர் மைசூரு மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திற‌ப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தார் முதல்வர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in