நிலக்கரி சுரங்க பகுதியைப் பசுமையாக்க 16 லட்சம் மரக்கன்றுகளை நட்டது அதானி நிறுவனம்

நிலக்கரி சுரங்க பகுதியைப் பசுமையாக்க 16 லட்சம் மரக்கன்றுகளை நட்டது அதானி நிறுவனம்
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் சர்​குஜா​வில் உள்ள பார்சா ஈஸ்ட் மற்​றும் காந்தா பாசன் நிலக்​கரிச் சுரங்​கத்​தை, அதானி என்​டர்​பிரைசஸ் நிறு​வனம் 16 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மரக்கன்​றுகளை நட்டு பசுமைப் பிரதேச​மாக மாற்​றி​யுள்​ளது. இது 568 ஹெக்​டேர் பரப்​பள​வில் அமைந்​துள்​ளது.

ராஜஸ்​தான் ராஜ்ய வித்​யுத் உத்​பாதன் நிகாம் நிறு​வனத்​துக்​காக செயல்​படும் இந்த சுரங்​கத்​தில் எடுக்​கப்​படும் நிலக்​கரிக்கு பிந்​தைய நில மறுசீரமைப்பு சாத்​தி​யம் என்​பதை இந்த திட்​டம் நிரூபித்​துள்​ளது. 2030-க்​குள் மரங்​களின் எண்​ணிக்​கையை 40 லட்ச​மாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இங்கு சுரங்​கப் பணி​களுக்​காக வெட்​டப்​படும் ஒவ்​வொரு மரத்துக்கும் பதிலாக 40 உள்​நாட்டு மரங்​கள் நடப்​படு​கின்​றன. இவற்​றின் பிழைப்பு விகிதம் 88% ஆகும். இந்​தச் சுற்​றுச்​சூழல் மறுசீரமைப்​பைப் பாராட்​டி​யுள்ள மத்​திய நிலக்​கரி அமைச்​சகம், பொறுப்​பான சுரங்​கத் தொழிலுக்​கும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கும் இது​வொரு சிறந்த உதா​ரணம் என்று குறிப்​பிட்​டுள்​ளது.

மேலும், அதானி நிறு​வனம் 5 லட்​சம் நாற்​றுகளு​டன் 3.5 ஹெக்​டேரில் நர்​சரி ஒன்றை அமைத்​துள்​ளது. அத்​துடன், பல்​வேறு வனக்​கோட்​டங்​களில் 4,000 ஹெக்​டேருக்​கும் அதி​க​மான பரப்​பள​வில் மாற்று காடமைப்பு பணி​களை​யும் மேற்​கொண்​டுள்​ளது.

இதற்​காக சத்​தீஸ்​கர் அரசிடம் ரூ.259 கோடிக்​கும் மேல் டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் அனு​ம​தி​களுக்கு இணங்கி செயல்​படும் அதானி நிறு​வனம், உள்​ளூர் சமூகங்​களின் மேம்​பாட்​டுக்​கும் ஆதர​வளித்​து வருகிறது.

நிலக்கரி சுரங்க பகுதியைப் பசுமையாக்க 16 லட்சம் மரக்கன்றுகளை நட்டது அதானி நிறுவனம்
ஹெலிகாப்டர் பின்னணியில் ராணுவ கேப்டன் திருமண விருப்பத்தை தெரிவித்ததால் சர்ச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in