பருவநிலை மாற்றம் | இந்திய செயல்திட்டத்தை ஐ.நா மாநாட்டிற்கு தெரிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு செயல்திட்டத்தை பருவநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டிற்கு தெரிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு செயல்திட்டத்தை பருவநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டிற்கு தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாரீஸ் ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்டது போல், பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலுக்கு உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவதை நோக்கிய இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்துமாறு தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட தற்போதைய பங்களிப்பு செயல்திட்டம் கோரியுள்ளது.

இத்தகைய நடவடிக்கை வளர்ச்சிப்பாதைகளில் கரியமிலவாயு வெளியேற்றங்களை குறைக்க இந்தியாவுக்கு உதவும். இது நாட்டின் நலன்களை பாதுகாப்பதோடு, அதன் எதிர்கால வளர்ச்சித் தேவைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in