திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் நேற்று உள்வாங்கி காணப்பட்ட கடல்.
திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் நேற்று உள்வாங்கி காணப்பட்ட கடல்.
Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் இரண்டாவது நாளாக நேற்றும் உள்வாங்கியது. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகில் உள்ள கடல் பகுதியில் அன்றாடம் உள் வாங்கி காணப்படும். இந்நிலையில் கடந்த 7-ம்தேதி அமாவாசை தினமாகும். இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் திடீரென நேற்று முன்தினம் உள்வாங்கியது. அப்போது பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் நீர் உள் வாங்கியது. பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in