Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு : சுமுக முடிவு எட்டப்பட்டதாக தகவல்

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகளை தமாகா கேட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக -தமாகா தொகுதி பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலை நடைபெற்றது. அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். தமாகா சார்பில் துணை செயலாளர்கள் கோவை தங்கம், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதியம் 2.30 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும் தமாகாவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் தரப்படும் எனவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (மார்ச் 5) மாலை வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x