Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

களைகட்டிய அண்ணா அறிவாலயம்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் கூட்டம்.

திமுக வேட்பாளர் நேர்காணலால் சென்னை அண்ணா அறிவாலயம் நேற்று களைகட்டியது. சென்னையில் உள்ள திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் 2-வது நாளாக, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில், ஏற்கெனவே விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்றனர். இதனால் அண்ணா அறிவாலய வளாகம் நேற்று களைகட்டி இருந்தது. எந்த திசையில் பார்த்தாலும் திமுக கரை வேட்டிகளும், தொண்டர்களின் தலையுமாகவே தென்பட்டது. நேர்காணலை முடித்துவிட்டு, வளாகத்தில் நின்றிருந்த பலர், இந்த முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x