Last Updated : 26 Feb, 2021 05:46 AM

 

Published : 26 Feb 2021 05:46 AM
Last Updated : 26 Feb 2021 05:46 AM

பிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்.பி.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது, பிரதமரை வரவேற்க நின்று கொண்டிருந்த, தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமரின் காலில் விழ முற்பட்டார். அவரைத் தடுத்து நிறுத்திய பிரதமர், காலில் விழக்கூடாது என புன்னகையுடன் அறிவுறுத்தினார்.

இதேபோல, மற்றொரு அதிமுக எம்.பி.யும் பிரதமர் காலில் விழ முற்பட்டபோது, தடுத்து நிறுத்தினர். மேலும், பாஜக மாவட்ட நிர்வாகி கணேஷ்குமார், செருப்பை கழற்றிவிட்டு, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது, செருப்பை கழற்றக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மேடைக்குச் சென்ற பிரதமர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x