Published : 21 Feb 2021 06:54 AM
Last Updated : 21 Feb 2021 06:54 AM

முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் பிரச்சாரத்தால் களை கட்டியது தேர்தல் திருவிழா

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரம் அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி தனது 6-வது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18, 19-ம் தேதிகளில் மேற்கொண்டு முடித்திருக்கிறார்.

இதுபோல், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் இம்மாவட்டங்களில் கடந்த 5, 6, 7-ம் தேதிகளில் பிரச்சார பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பிரச்சார நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு முதல்வர் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதுபோல், தொண்டர்களுக்கு கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருவரின் நிகழ்ச்சிகளும் டிஜிட்டல் மயமாக இருந்தன.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் இவர்களது 2-ம் கட்ட பிரச்சார பயணம் இருக்கலாம். அதற்குமுன் தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் அடுத்தடுத்து பிரச்சாரத்துக்கு வர இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x