Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

மதுரையில் 3 தொகுதிகளுக்கு மார்க்சிஸ்ட் குறி

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துக் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

திமுகவுடனான தொகுதிப்பங்கீட்டில் மதுரை மாவட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டுப்பெறவும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறைந்தபட்சம் புறநகர், மாநகரில் தலா ஒரு தொகுதி என 2 தொகுதிகளையாவது கூட்டணியிடம் இருந்து பெற மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். எனவே மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டால் அங்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. மேலும், மதுரை மேற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதி என்பதால் அவரை எதிர்த்துப் போட்டியிடவும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x