Last Updated : 16 Feb, 2021 03:12 AM

 

Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

வன்னியர் உள் ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழுபறி

தமிழகத்தில் நடைபெற்ற 2016 நாடாளுமன்ற தேர்தல், 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது பாமக. அதனால், வடமாவட்டங்களில் பாமகவை பலப்படுத்தும் நோக்கில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை கட்சியின் நிறுவனர் ராமதாஸும், இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் கையில் எடுத்தனர். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் 6 கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தமிழக அரசு கோரிக்கையை ஏற்காததால், 20 தவீத இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக தருமாறு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். முதல்வர், அமைச்சர்களுடன் பல கட்டங்களாக பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இடஒதுக்கீடு விஷயத்தில் தீர்வு எட்டப்படவில்லை.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பாமக தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை, உள் ஒதுக்கீடாக குறைத்துக் கொண்டோம். இதற்கும் கீழ் செல்ல முடியாது. குறைந்தது 10 சதவீதமாவது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். நேரிலும், தொலைபேசியிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால்தான் கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x