Published : 12 Mar 2019 08:40 AM
Last Updated : 12 Mar 2019 08:40 AM

40 தொகுதியிலும் வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்பு பொதுக் குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் 10-ம் தேதி இரவு நடந்தது. கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால், தொலைபேசி மூலம் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:

ஒரு தொகுதிக்காக யாரிடமும் யாசகம் கேட்கும் நிலையில் நாம் இல்லை. 2 சதவீத வாக்கு உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செல்கின்றனர்.

சீமான், சரத்குமார், கமல்ஹாசன் எல்லோரும் தனித்து நிற்கின்றனர். நாம் நிற்கக்கூடாதா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. நாமும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x