Published : 16 Mar 2019 10:41 AM
Last Updated : 16 Mar 2019 10:41 AM

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிவிப்பு

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு தொகுதியில் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார் என வைகோ இன்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற இருக்கின்ற 17 ஆவது பொதுத் தேர்தலில், திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மதிமுக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x