Published : 29 Mar 2019 07:55 AM
Last Updated : 29 Mar 2019 07:55 AM

தெலுங்கு தேசத்தை ஆதரித்து ஆந்திராவில் கேஜ்ரிவால் பிரச்சாரம்

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ஆந்திராவில் பல இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

இதில் அவர் குண்டூர் மாவட்டம் மைலாவரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை நல்ல மெஜாரிட்டியுடன் வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்ளவே உங்கள் முன் வந்தேன். நாயுடு ஒரு சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல. மிகச்சிறந்த நிர்வாகியும் கூட. மாநில பிரிவினை வந்தபோதும், ஆந்திர மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கியவர். ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டும். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை தலைகீழாக கொண்டு போகச் செய்துவிட்டார்.

பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை நாடு கண்டது. தனது சுயநலத்திற்காக மோடி, சாதி, மதங்களை அரசியலாக்கி வருகிறார். ஜெகன்மோகன் ரெட்டிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு போடுவதை போன்றதாகும். இதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்தியில் மோடி ஆட்சி ஒழிய வேண்டும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x