Published : 03 Mar 2014 08:04 PM
Last Updated : 03 Mar 2014 08:04 PM

திரும்பிப் பார்ப்போம்

ஒரு காலத்தில் சென்னை நகரம் உருவானதே இங்கிருந்துதான் என்று சொல்லலாம். பிரான்சிஸ் டே என்கிற ஆங்கிலேயர் 1640-ல் இந்தப் பகுதியில்தான் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688-ல் இங்குதான் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

1977-ல் இங்கு ஜனதா கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற பா.ரா. என்கிற ராமச்சந்திரன், பின்னாட்களில் கேரளாவின் ஆளுநராகவும் பதவிவகித்தார். கடந்த 96-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்துவருகிறது. முரசொலி மாறன் இங்கு பதவி வகித்து, மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தத் தொகுதி பரவலாக முன்னேற்றம் கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x