Published : 06 Mar 2019 09:12 AM
Last Updated : 06 Mar 2019 09:12 AM

ஆந்திரா, தெலங்கானாவில் இணையும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

விரைவில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இடதுசாரிகள் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரும் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என மாநிலத்துக்கு தகுந்தவாறு வியூகம் வகுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இம்முறை நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

மேலும், தெலங்கானா மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இது குறித்து நேற்று ஹைதராபாத் வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆந்திராவை பொருத்தவரை இம்முறை ஜனசேனா கட்சியுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியிகள் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும். தெலங்கானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை தேர்தலை சந்திக்கும். விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x