Published : 30 Mar 2019 07:37 AM
Last Updated : 30 Mar 2019 07:37 AM

மன்சூர் அலிகானின் பிரச்சார அலப்பறை

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கிவிடுகிறார். கட்சிக் கொடியுடன் 5 பேர் மட்டும் உடன் செல்கின்றனர்.

கொடைக்கானலில் டீக்கடைக்குள் போய், இவரே டீ ஆத்துவதும்.. திண்டுக்கல்லில் துப்புரவுத் தொழிலாளிகளிடம் கூடையை வாங்கி குப்பைகளை அள்ளி வண்டியில் போடுவதும்.. வீட்டு வாசலில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வம்படியாக அம்மியை வாங்கி, வெங்காயம், தேங்காய் வைத்து சட்னி அரைத்து தருவதும்.. இளநீர் கடையில் அவரே அரிவாளை எடுத்து சுழற்றி, சரசரவென இளநீர் வெட்டுவதும்.. மூஞ்சிக்கல் பகுதியில் செருப்புத் தொழிலாளியிடம் சென்று, ஷூக்களுக்கு பாலிஷ் போடுவதுமாக.. வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தகவல், படங்கள்: பி.டி.ரவிச்சந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x