Published : 29 Mar 2019 06:32 AM
Last Updated : 29 Mar 2019 06:32 AM

சமூக நீதியை வழங்கியது காங்கிரஸும் திமுகவும்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

60 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்று கூறுகின்றனர். ஆங்கிலேயர் நம்மை விட்டுச் சென்றபோது இந்தியாவில் 90 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் தற்போது 70 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளனர்.

ஏழை மக்களுக்கு உதவும் வகை யில் மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் குறித்து பெண் களிடமும், பொதுமக்களிடமும் காங்கிரஸும் தோழமைக் கட்சிகளும் எடுத்து கூற வேண்டும். இந்த நாட்டில் சமூக நீதியைக் கொண்டு வந்தது காங்கிரஸும் திமுகவும்தான்.

இவ்வாறு அழகிரி பேசினர். இக் கூட்டத்தில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி. ஆர்.மனோகரன், திமுக எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x