Published : 23 Mar 2019 05:57 PM
Last Updated : 23 Mar 2019 05:57 PM

பிரச்சாரத்தின் போது குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சேலத்தில் இன்று உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பில் திமுக வேட்பாளர் கெளதம சிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் உதயநிதி.

சேலம், உடையார்பட்டியில் அவர் பிரச்சாரம் செய்த நிலையில், உதயநிதியைக் காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது கட்சித் தொண்டர்களின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார். இரண்டு தம்பதிகளின் குழந்தைகளுக்கு கதிரவன் என்றும் உதயசூரியன் என்றும் பெயர் வைத்தார் உதயநிதி.

கதிரவன் என்று பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்கு சுமார் 2 வயது இருக்கும் என்பதால் சுற்றிலும் இருந்த பொதுமக்கள் கைதட்டி, விசில் அடித்தனர். இதனால் அந்த இடமே கலகலப்பாக மாறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x