Published : 09 Mar 2019 09:08 AM
Last Updated : 09 Mar 2019 09:08 AM

ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்த நடிகை ஜெயசுதா

தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசுதா. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இவர் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ராஜசேகர ரெட்டியின்மறைவுக்கு பிறகு ஜெயசுதா அரசியலில் இருந்துஒதுங்கி இருந்தார். சமீபத்தில் இவரது கணவர்காலமானார். இந்நிலையில் இவர், ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார்.

பின்னர், ஜெயசுதா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜெகன்மோகன் ரெட்டி இம்முறை ஆந்திர முதல்வராவது உறுதி. ஆனால் இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டியின் விருப்பத்தின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். சினிமா நட்சத்திரங்கள் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திப்பதில் தவறு என்ன இருக்கிறது? இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x