Published : 27 Mar 2019 10:58 AM
Last Updated : 27 Mar 2019 10:58 AM

ஜி.டி.நாயுடுவுக்குப் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ தான் மிகச்சிறந்த விஞ்ஞானி: ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்

இந்தியாவில் ஜி.டி.நாயுடுவுக்குப் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ தான் மிகச்சிறந்த விஞ்ஞானி என, தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 9 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சிக்கு நிகராக யாரும் இல்லை என்பதோடு மட்டுமல்ல, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நிகராகவும் யாரும் இல்லை. ஜி.டி.நாயுடுவுக்குப் பிறகு மிகச்சிறந்த விஞ்ஞானியாக இருக்கக் கூடியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ தான்.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸைப் போன்று, வைகை ஆற்று நீர் நீராவியாகாமல் இருக்க தெர்மாகோல் போடலாம் என்பதைக் கண்டுபிடித்தவர் செல்லூர் ராஜூ. அதைக்கண்டு நாடு இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறது. செல்லூர் ராஜூவை நவீன காலத்து தெனாலி ராமன் என்று தான் சொல்ல வேண்டும்" என, ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x