Published : 25 Mar 2019 06:35 AM
Last Updated : 25 Mar 2019 06:35 AM

ஜாமீனுக்காக அலையும் கார்த்தி சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார்?- எச்.ராஜா கேள்வி

பல்வேறு வழக்குகளில் ஜாமீனுக்காக அலைந்துகொண்டிருக்கும் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் மக்களை எப்படி சந்திப்பார்கள் என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை தொகுதியில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளின்  ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் எப்படி மக்களை சந்திக்க முடியும்?. அவர்களிடம்  பண பலம் உள்ளது. எங்களிடம் மக்கள் பலம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x