Published : 12 Apr 2014 11:16 AM
Last Updated : 12 Apr 2014 11:16 AM
வடசென்னை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாசுகியின் பிரச்சார ஊர்வலத்தின் போது தொண்டருக்கு இரும்பு கம்பி அடி விழுந்தது.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வாசுகி போட்டியிடுகிறார். வெள்ளிக்கிழமை மாலையில் பழைய வண்ணாரப்பேட்டை காட்பாடா சின்ன சந்தை பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது வழியை ஒழுங்குபடுத்தும் பணியில் சில தொண்டர்கள் ஈடுபட்டனர். சாலையில் ஒரு கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை ஓரமாக எடுத்து வைத்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கும், பாபு என்ற தொண்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு ஆதரவாக மேலும் இரண்டு பேர் சேர்ந்து பாபுவை தாக்கினர்.
அப்போது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் பாபுவின் தலையில் தாக்கினார். இதில் பாபுவின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாபுவை தாக்கிய மூவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT