Published : 04 Apr 2014 01:31 PM
Last Updated : 04 Apr 2014 01:31 PM

தமிழகத்தில் இதுவரை 457 பேர் மனு தாக்கல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 457 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நான்காவது நாளான வியாழக்கிழமையன்று, 417 பேர் மனுக்களை அளித்துள்ளனர். ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

மொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இதுவரை 39 பெண்கள், “இதரர்” ஒருவர் உள்பட 457 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட 4 பேர் மனுக்களை அளித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x