Published : 11 Apr 2014 10:19 AM
Last Updated : 11 Apr 2014 10:19 AM

மத்திய அரசு திட்டங்களுக்கு அதிமுக அரசு தடை: வாசன்

“மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. அரசு தடையாக உள்ளது” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:

மத்திய அரசின் முயற்சியால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் 15,954 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 14 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்க என்.எல்.சி. மூலம் 2,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் இங்கே நடைபெற்று வருகின்றன.

இத்திட்டங்களை நிறைவேற்ற விடாமல், அ.தி.மு.க. தடையாக உள்ளது.

மத்திய அரசின் நவோதயா, கேந்திரா வித்யாலயா பள்ளிகளுக்கு தேவையான நிலத்தை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.

ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதன் மூலம் பா.ஜ.க. வின் சுயரூபம் வெளியே தெரிந்துள்ளது. சேது சமுத்திர திட்டத்துக்கு அ.தி.மு.க. வும், பா.ஜ.க.வும் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்றார் வாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x