Published : 24 Apr 2014 12:35 PM
Last Updated : 24 Apr 2014 12:35 PM

தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும்: அன்புமணி நம்பிக்கை

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "தமிழகத்தில் அதிமுக திமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் தெரிகிறது. மோடி பிரதமராக வேண்டும், இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுமக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. இதன் காரணமாக தே.ஜ. கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முதல்முறையாக விதித்த 144 தடை உத்தரவு அதிமுக, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்குதான் உதவியாக இருந்தது.

பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் பணப் பட்டுவாடாவையும் மீறி, பொதுமக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்". இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x