Published : 23 Apr 2014 08:38 AM
Last Updated : 23 Apr 2014 08:38 AM

கிரிராஜ் பிரச்சாரத்துக்கு தடை: மோடி எதிர்ப்பாளரை எச்சரித்தவர்

பிஹார், ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்ய பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்கிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: “கிரிராஜின் பேச்சு அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது.

தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க கிரிராஜ் சிங்கிற்கு அனுமதி அளிக்கக் கூடாது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மீது விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரிலும், பொகாரோவிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய கிரிராஜ் சிங், “மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து கிரிராஜ் சிங் மீது தியோகர், பொகாரோ, பாட்னா விமான நிலைய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x