Published : 24 Apr 2014 02:18 PM
Last Updated : 24 Apr 2014 02:18 PM

காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும்: நாராயணசாமி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் 3–வது முறையாக ஆட்சி அமைக்கும். இளம் தலைவர் ராகுல்காந்தி இந்திய பிரதமராவார். நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நான் மீண்டும் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தித் தருவேன். மேலும், புதுச்சேரியில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைக் கொண்டு வருவேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x