Published : 06 May 2014 10:53 AM
Last Updated : 06 May 2014 10:53 AM

வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுவதாக பாஜக புகார்

உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வாக்குச்சாவடி கள் கைப்பற்றப்படுவதாக, மத்திய தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது.

இது குறித்து ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சுமார் 15 வருடங்களுக்கு முன் பெரும்பாலான மாநிலங்களில் நடந்து வந்த வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால், 2014-ன் மக்களவை தேர்தலில் ‘அமைதியான முறையில் வாக்குச்சாவடி கைப் பற்றுதல்’ தொடர்கிறது. இது குறிப்பாக உ.பி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அதிகமாக உள்ளது.

இதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x