Published : 07 May 2014 10:17 AM
Last Updated : 07 May 2014 10:17 AM

மோடியின் செயல்களே தரம் தாழ்ந்து இருக்கின்றன: ராகுல் காந்தி பதில்

நரேந்திர மோடி தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என பிரியங்கா கூறவில்லை அவரது செயல்களே தரம் தாழ்ந்து இருப்பதாக பிரியங்கா விமர்சித்தார் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உ.பி.யில் நேற்று (செவ்வாய்கிழமை) பேசிய மோடி: "நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே எனது அரசியல் தரம் தாழ்ந்தது என பிரியங்கா விமர்சிக்கிறார்.பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறப்பது குற்றமா?" என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அமேதியில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி.

அப்போது அவரிடம் மோடியின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்: "நரேந்திர மோடியின் எண்ணமும், செயலும் தான் தரம் தாழ்ந்ததாக இருக்கின்றன. மோடியின் கொள்கைகளில் குரோதம் நிறைந்திருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x