Published : 22 Apr 2014 08:28 AM
Last Updated : 22 Apr 2014 08:28 AM

ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்போம்: தேவகவுடா

ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்போம் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனருமான தேவகவுடா தெரிவித்தார்.

ஓசூர் ராம் நகர் தொகுதியில் போட்டியிடும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் என்.எஸ்.எம்.கவுடாவை ஆதரித்து திங்கள் கிழமை தேவகவுடா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: "மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும். நாட்டின் சாதாரண மக்கள் கூட தேவைப்பட்டால் வெளிநாடுகளுக்கு எளிதாக சென்று வர முடிகிறது. ஆனால் குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 2002 குஜராத் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை.

நரேந்திர மோடி, பிரதமராக வர வேண்டும் என்பதற்காக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கை கோத்து செயல்படுகின்றன. அவர்களுக்கு அதரவாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஊடகங்களும் உள்ளன". இவ்வாறு தேவகவுடா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x