Published : 06 Apr 2014 12:00 PM
Last Updated : 06 Apr 2014 12:00 PM

இரட்டை இலக்கத்தை காங்கிரஸ் தாண்டாது: மோடி

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தாண்டாது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

காந்திநகரில் நேற்று நடை பெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: வரும் மக்க ளவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும். அந்தக் கட்சிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை நிச்சயமாக இரட்டை இலக்கத்தைத் தாண்டாது. சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்காது. அதிகபட்சமாக ஒரு மாநிலத்தில் 10 இடங்களுக்கு மேல் காங்கிரஸால் பெற முடியாது.

அவசர நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு காங்கிரஸ் சந்திக்கப் போகும் மிகப் பெரிய தோல்வியாக இது இருக்கும். காங்கிரஸின் எதிர்காலத்தை மக்கள் முன்கூட்டியே கணித்து விட்டனர் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x