Published : 21 Apr 2014 10:18 AM
Last Updated : 21 Apr 2014 10:18 AM

ஓ.பி.எஸ். உதவியாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

காரைக்காலில் நடந்த வாகனச் சோதனையில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் உதவியாளரிட மிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அம்பகரத்தூர் சோதனைச் சாவடியில் பறக்கும்படை அதிகாரி கள் வாகனச் சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது காரைக் காலில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கிச் சென்ற ஒரு காரை சோதனையிட்டபோது அதில் இருந்த நபர் ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த பெரியகுளத் தைச் சேர்ந்த ராஜா என்பவர் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் தின் உதவியாளர் என்று கூறப்படு கிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x