Published : 25 Apr 2014 01:37 PM
Last Updated : 25 Apr 2014 01:37 PM

விமர்சனத்தை நிறுத்துங்கள்: மோடிக்கு பிரியங்கா கண்டிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பெரேலியில் சோனியா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில், இந்திய நாட்டில் ஆர்.எஸ்.வி.பி. (RSVP ) ராகுல், சோனியா, வதேரா, பிரியங்கா வளர்ச்சி மாதிரி கடைபிடிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது சின்னத்தை மாற்றிவிட்டது. ஏபிசி (ABC) ஆதர்ஷ் ஊழல், போபர்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல் தான் காங்கிரஸ் கட்சியின் அடையாளம் என விமர்சித்திருந்தார்.

இதனை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா காந்தி, "குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் ஏழை விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மைகள் செய்துள்ளதா? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதா? குஜராத்தில் மோடி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் நிலங்களை விற்றதை தவிர வேறு என்ன செய்தார்?. தனிப்பட்ட விமர்சனங்களை நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதையே கொள்கையாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x