Published : 29 Apr 2014 08:30 AM
Last Updated : 29 Apr 2014 08:30 AM

தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனர்: அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு

தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் திங்கள்கிழமை 4 இடங்களில் அதிமுகவினர் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் காஞ்சிபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பதாகவும் அதற்கு வாழ்த்து தெரிவித் தும் வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பேனர்களை வைத்துக் கொண்டிருக்கும்போதே காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானுவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, அவர் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு பேனர்களை அகற்றினர். அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், நகர்மன்ற உறுப்பினர் பரிமளம் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x