Published : 04 Apr 2014 05:57 PM
Last Updated : 04 Apr 2014 05:57 PM

என்ன செய்தார் எம்.பி.?

எம்.பி. ஜே.எம். ஆரூண் ரஷித் திடம் பேசினோம். ‘‘ஏலக்காய் குளறுபடிகளைத் தவிர்க்க இணைய வழி ஏலம் முறையைக் கொண்டுவந்தேன். கேரளா, தேனிக்கு இடையே தினசரி ஒரு லட்சம் பேர் சென்றுவருகின்றனர் எனக் கூறி, கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் விதிமுறைகளிலிருந்து பீர்மேடு, தேவிகுளம் தாலுகாவுக்கு விலக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். முல்லைப் பெரியாறு நீர் மின்திட்டம், ஆண்டிபட்டி ஜவுளிப் பூங்கா உள்பட 25 பெரிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளேன். மாநில அரசு ரயில்வே திட்டங்களுக்குப் பங்குத் தொகையைக் கொடுக்காததால், அவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ரயில்வே அமைச்சர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் ரயில்வே திட்டங்கள் தொடங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x