Published : 28 Apr 2014 09:25 AM
Last Updated : 28 Apr 2014 09:25 AM

கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள இடம் பாஜகவுக்கு தெரியும்: ஆனந்த் சர்மா

கறுப்புப் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது, அதை எப்படி பயன்படுத்துவது என்று பாஜகவுக்குத் தெரியும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

இதுகுறித்து அவர் அகமதா பாதில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: நரேந்திர மோடியின் ஊடக விளம்பரம் குறிப்பிட்டு சொல்லக் கூடியது. முக்கிய பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம், 500-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களில் பிரச்சாரம் என எனக்குத் தெரிந்து ஊடக விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப் படுகிறது.

கறுப்புப் பணத்தை மீட்போம் என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கறுப்புப் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள் ளது என்று அவர்களுக்குத் தெரியும். அந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x