Published : 14 Mar 2014 09:04 PM
Last Updated : 14 Mar 2014 09:04 PM

இது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை

ஆர். பிரணவகுமார் - பா.ஜ.க. விளையாட்டு அணி மாவட்டத் தலைவர், தருமபுரி.

ப்ளோரோஸிஸ் பாதிப்பு தொகுதியில் பல ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை. தொகுதியின் நிலத்தடி நீரில் ஃப்ளோரைடு கனிமம் அதிகம் உள்ளது. நிலத்தடி நீரையே 90% மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதால், பெரும்பான்மை மக்களுக்கு ஃப்ளோரோஸிஸ் பாதிப்பு உள்ளது.

இதனால், பல், எலும்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தீர்வுகாணும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 2013 மே மாதம் குடிநீர் விநியோகம் தொடங்கியது. ஆனால், 50% மக்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்கிறது.

தொப்பூர், பொம்மிடி, அரூர் வட்டத்தின் கிராமப் பகுதிகள், கோட்டப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, அரைக்காசன அள்ளி ஆகிய ஊர்களுக்குக் குடிநீர்த் திட்டம் முழுமையாகச் சென்றடையவில்லை. தருமபுரி நகரின் பல பகுதிகளில் ஒகேனக்கல் குடிநீரும், உள்ளூர் நிலத்தடி நீரும் கலந்தே விநியோகம் செய்யப்படுகிறது.

அதிகாரிகளிடம் கேட்டால், சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே முதல் கட்டமாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவருகிறது என்கிறார்கள். எனவே, விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரி நீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x