Published : 28 Mar 2014 07:36 PM
Last Updated : 28 Mar 2014 07:36 PM

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

பேராசிரியர் முரளி - அமைப்பாளர், தமிழர் உரிமை மீட்பு இயக்கம், மயிலாடுதுறை.

ஒரு நாளைக்கு 15 பேருந்துகள் வந்து சென்றபோது அமைக்கப்பட்ட மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில், தற்போது 500 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், பேருந்து ஓட்டுநர்களும் மக்களும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தேவை. அவசரச் சிகிச்சைக்கு திருவாரூருக்கோ அல்லது தஞ்சைக்கோதான் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

வி. சத்தியநாராயணன் - பொதுச் செயலாளர், அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு, கும்பகோணம்.

பன்முகப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கும்பகோணம் - ஜெயங்கொண்டம் -விருத்தாசலம் புதிய ரயில் பாதைத் திட்டம் பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, இப்போதுதான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக உளுந்தூர்பேட்டை வரையிலான மாநில நெடுஞ்சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, நான்குவழிச் சாலையுடன் இணைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x