Published : 27 Mar 2014 06:26 PM
Last Updated : 27 Mar 2014 06:26 PM

என்ன செய்தார் எம்.பி.?

எம்.பி. பழநிமாணிக்கத்திடம் பேசினோம். “ரூ. 200 கோடியில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிலகம் (ஐ.ஐ.சி.பி.டி.) கொண்டு வந்துள்ளேன். கல்லணைக் கால்வாய் சீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ளன. திருச்சி - தஞ்சை - விழுப்புரம் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. கோவை - மயிலாடுதுறை, தஞ்சை - சென்னை உழவன் விரைவு ரயில் கொண்டுவரப்பட்டன. ஒரத்தநாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரி, பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது.

திருச்சி - தஞ்சை - நாகை நான்கு வழிச் சாலை திருச்சி - தஞ்சை வரை முடிந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத் தடுப்புக்கு ரூ.300 கோடியில் பணிகள் நடக்கின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x