Published : 21 Apr 2014 09:11 AM
Last Updated : 21 Apr 2014 09:11 AM

தேர்தல்: ஏப்ரல் 24-ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

நாடாளுமன்ற தேர்தலில் கோயம் பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் சென்னை- கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்ப டுவதாக வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, சென்னை- கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் வி.ஆர். சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:

கோயம்பேடு சந்தையில் 4 ஆயிரம் காய்கறி அங்காடிகள், 2 ஆயிரம் பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் என 6 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடை களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர் களில், கணிசமானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, தேர்தல் நாளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x