Published : 09 Mar 2014 05:46 PM
Last Updated : 09 Mar 2014 05:46 PM

திரும்பிப் பார்ப்போம்

இந்தத் தொகுதி நீண்டகாலமாக ராசிபுரம் தொகுதியாக இருந்தது. பிரபல நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணன், கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் ஆகியோர் ராசிபுரத்தைச் சேர்ந்தவர்களே. கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் உள்ள தியாகதுருகம் மலை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

அந்த மலையில் இருக்கும் கோட்டை 1756-ல் பிரெஞ்சு வசம் இருந்தது. 1760-ல் ஹைதர் அலி இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்பு ஆங்கிலேயர் வசமானது கோட்டை. 1790-ல் இந்தக் கோட்டைக்காக ஹைதர் அலிக்கும் ஆங்கிலேயருக்கும் போர் மூண்டது. இந்தக் கோட்டையின் பீரங்கிகள் இன்றும் வரலாற்றைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x