Published : 01 Apr 2014 06:35 PM
Last Updated : 01 Apr 2014 06:35 PM

என்ன செய்தார் எம்.பி.?

மு.க.அழகிரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். “ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு வெறும் இரண்டு கோடியாக இருந்த மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஐந்து கோடியாக்க கோரிக்கை வைத்தவர் அழகிரி. அப்படி அவர் ஐந்து ஆண்டுகளில் பெற்ற 19 கோடி ரூபாயையும் செலவிட்டுள்ளார். புதிய சென்ட்ரல் மார்க்கெட், மேலூரில் அரசு பாலிடெக்னிக், இடையபட்டியில் 25 கோடி ரூபாயில் மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப (சிப்பெட்) கல்லூரி, காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம், விமான நிலைய புதிய முனையம், நான்கு இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த திருமண மண்டபம் எல்லாமே அழகிரி கொண்டுவந்தவைதான்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x