Published : 04 Mar 2014 07:21 PM
Last Updated : 04 Mar 2014 07:21 PM

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

பாஸ்கர் - ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு, முன்னாள் உறுப்பினர், திருவள்ளூர்.

திருவள்ளூர் - அரக்கோணம் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகளும் மிகக் குறைவாக உள்ளன. இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு நேரடிப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

துரை மகேந்திரன் - பொதுச்செயலாளர், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம்.

பழவேற்காடு ஏரியை நம்பி சுமார் 50,000 மீனவர்கள் உள்ளனர். இதன் முகத்துவாரம் தூர்வாரப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூர்வாரினால் மீன்வளம் அதிகரிக்கும். கடல் அரிப்பு அச்சுறுத்துவதால், கருங்கல் தடுப்பு தேவை. பழவேற்காடு - பசியாவரம் இடையே பாலத்தையும், பழவேற்காட்டிலிருந்து காட்டுப்பள்ளி வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையையும் அமைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x