Published : 08 Apr 2014 04:03 PM
Last Updated : 08 Apr 2014 04:03 PM

பாஜக தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமே: அத்வானி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கடினம்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூற முடியாது.

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை பெறாத பலத்துடன் ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவது உறுதி" என்றார்.

கேளரத்தில் இம்மாதம் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபாலை ஆதரித்து அத்வானி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x