Published : 26 Apr 2014 09:38 AM
Last Updated : 26 Apr 2014 09:38 AM

அரசியல் பல்டி அடிப்பதில் பாஸ்வான் நிபுணர்: நிதிஷ்குமார் விமர்சனம்

அரசியல் பல்டியடிப்பதில் ராம் விலாஸ் பாஸ்வான் மிகத் தேர்ந்த நிபுணர் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். பாஜகவுடன் பாஸ்வான் கூட்டணி அமைத்துள்ளது குறித்தே நிதிஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதிஷ்குமார் பர்பட்டா பகுதியில் தேர்தல் பிரச் சாரத்தின்போது கூறியதாவது:

2002 குஜராத் கலவரத்துக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து விலகிவிட்டதாக ராம்விலாஸ் பாஸ்வான் குறிப் பிடுவதை ஒருபோதும் மறக்க வில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் அவர் இவ்வாறுதான் சொல்லி வந்தார். ஆனால், இப்போது, குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருந்த நரேந்திர மோடியைத் துதிபாடி வருகிறார் பாஸ்வான்.

இந்த அளவுக்குத் துல்லியமாக அரசியல் பல்டி அடிக்கும் நபரை யாரும் பார்த்திருக்க முடியாது.

லாலு பிரசாத் யாதவ் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம், என்னைப் பற்றி விமர்சிக்கிறார். இந்த தேர்தலில் நிதிஷ்குமார் ஒரு பொருட்டேயில்லை எனக் கூறிவருகிறார். அப்படி இருந்தால் அவர் ஏன் என் பெயரை எல்லா இடங்களிலும் சொல்ல வேண்டும் என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தி லிருந்து விலகிய எம்.எல்.ஏ. சாம்ராட் சவுத்ரி, “கால்நடைத் தீவன ஊழலில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் எப்படி ஒரு கட்சியின் தலைவ ராக நீடிக்க முடியும் என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி யெழுப்பியுள்ளார்” என்பதையும் நிதிஷ் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x