Published : 10 Apr 2014 01:11 PM
Last Updated : 10 Apr 2014 01:11 PM
மீஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, தேமுதிக நகர செயலாளர் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரில் கடந்த 7-ம் தேதி அதிமுக, தேமுதிக கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இதற்கு சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. முப்பாத்தம்மன் கோயில் அருகே இருகட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக, அதிமுக கட்சியின் மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன் அளித்த புகாரின் பேரில், தேமுதிக மீஞ்சூர் நகர செயலாளர் லெனின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT