இந்திய கல்வி நிறுவனங்களில் முதன்முறையாக கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இரட்டை பட்டப்படிப்புக்கு விஐடி ஒப்பந்தம்

இரட்டை பட்டப்படிப்பு மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர்.

இரட்டை பட்டப்படிப்பு மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூர்: அமெரிக்​கா​வில் உள்ள கொலம்​பியா பல்​கலைக்​கழகத்​துடன் விஐடி பல்​கலைக்​கழகம் இரட்டை பட்​டப்​படிப்பு மேற்​கொள்ள புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்டுள்​ளது.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் உள்ள இந்​திய தூதரகத்​தின் துணை தூதர் பினாய காந்த பிர​தான் தலை​மை​யில், விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன்

மற்​றும் கொலம்​பியா பல்​கலைக்​கழகத்​தின் கல்வி விவ​காரங்​கள், உலகளா​விய ஒருங்கிணைப்பு துறை டீன்செனட்​டர் சுலைமன் கச்​சானி ஆகியோர் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​மூலம், கொலம்​பியா பல்​கலைக்​கழகத்​துடன் இரட்டை பட்​டப்​படிப்பு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடும் முதல் இந்திய பல்​கலைக்​கழகம் விஐடி என்​பது குறிப்​பிடத் தக்​கது.

இதுகுறித்​து, விஐடி நிறு​வனரும் வேந்​தரு​மான கோ.​விசுவ​நாதன் கூறிய​தாவது: இது விஐடி மற்​றும் கொலம்​பியா பல்​கலைக்​கழகத்​துக்கு இடையி​லான ஒரு மைல்​கல் ஒப்​பந்​த​மாகும். உலகின் மிகச்​சிறந்த கல்வி நிறு​வனங்​களில் ஒன்​றுடன் இரட்டை பட்​டப்​படிப்பு திட்​டத்தை வழங்​கும் முதல் இந்​திய பல்​கலைக்​கழகம் என்ற சிறப்பை பெறு​வ​தில் பெரு​மகிழ்ச்சி அடைகிறோம்.

உலக தரத்​துக்​கேற்ற கல்​வியை வழங்​கு​வ​தி​லும், மாணவர்​களுக்கு வாழ்க்​கையை மாற்​றியமைக்​கும் சர்​வ​தேச கற்​றல் வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் விஐடி கொண்​டுள்ள தளராத அர்ப்​பணிப்​பையே இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் வெளிப்​படுத்​துகிறது. இவ்​வாறு தெரி​வித்​தார். இந்த நிகழ்​வில், விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் மற்​றும் சர்​வ​தேச உறவு​கள் இயக்​குநர் ஆர்​.சீனி​வாசன் ஆகியோர்​ பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>இரட்டை பட்டப்படிப்பு மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர். </p></div>
ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in