உலகை மாற்றும் ஆற்றல் மிக்கவர்கள் இந்திய இளைஞர்கள்: அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் பெருமிதம்

​விஐடி சென்னையின் 14-வது பட்டமளிப்பு விழா
விஐடி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் ராமசாமி, விஐடி நிறுவனர், வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். படம்: எம்.முத்துகணேஷ்

விஐடி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் ராமசாமி, விஐடி நிறுவனர், வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். படம்: எம்.முத்துகணேஷ்

Updated on
2 min read

மேலக்​கோட்​டையூர்: விஐடி சென்​னை​யின் 14-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. விழாவுக்கு விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்​கி​னார். துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், ஜி.​வி.செல்​வம் முன்​னிலை வகித்​தனர். துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன் வரவேற்​றார்.

மத்​திய அரசின் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பத் துறை​யின் முன்​னாள் செய​லா​ளர் டி.​ராம​சாமி தலைமை விருந்​தின​ராக பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்குப் பட்​டங்​களை வழங்​கி​னார். தென்​னிந்​தி​யா​வுக்​கான இலங்கை துணைத் தூதர் கணேச​நாதன் கீதீஸ்​வரன், பென்​னட் கோல்​மன் அண்ட் கோ நிறு​வனத்​தின் தலை​மைச் செயல்​பாட்டு அதி​காரி மோஹித் ஜெயின் ஆகியோர் சிறப்பு மற்​றும் கவுரவ விருந்​தினர்​களாக பங்​கேற்​றனர்.

விழா​வில் 41 மாணவ, மாணவி​களுக்குத் தங்​கப் பதக்​கங்​கள் உள்பட மொத்​தம் 4,518 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டன. விழா​வில், தலைமை விருந்​தினர் ராம​சாமி பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் கடந்த பல ஆண்​டு​களுக்கு முன்பு உயர்​கல்​வி​யில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) மிக​வும் குறை​வாக இருந்​தது. தற்​போது அது அதி​கரித்​துள்​ளது. தமிழகத்​தில் கடந்த பல ஆண்​டு​களுக்கு முன்பு 740 பொறி​யியல் மாணவர்​கள் மட்​டுமே பட்​டம் பெற்​றனர். இன்று மாநிலத்​தில் லட்​சக்​கணக்​கான பொறி​யியல் மாணவர்​கள் பட்​டம் பெற்று வரு​கின்​றனர்.

2000-ம் ஆண்டு முதல், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டில் தமிழ்​நாடு ஒரு முன்​னணி மாநில​மாக உரு​வெடுத்​துள்​ளது. இது ஆய்​விதழ்​களில் வெளி​யிடப்​பட்ட ஆய்​வுக் கட்​டுரைகளின் எண்​ணிக்​கை​யின் மூலம் தெரிய​வரு​கிறது.

உலக இளைஞர் தொகை​யில் 29 சதவீதம் பேர் இந்​திய இளைஞர்​கள், ஒரு புதிய உலகத்தை வடிவ​மைப்​ப​தற்​கான போது​மான ஆற்​றலும் திறனும், உலகை மாற்​று​வதற்​கான நம்​பிக்​கை​யும் இந்​திய இளைஞர்​களிடம் உள்​ளது. குறிப்​பாக, இந்​திய இளைஞர்​களிடம் பொருளா​தார வளர்ச்​சி​யை​யும் முன்​னேற்​றத்​தை​யும் நீடித்த வளர்ச்​சி​யுடன் இணைப்​ப​தற்​கான தெளி​வும் திறன்​களும் உள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசுகை​யில், “இந்​திய மக்​கள் தொகை​யில் சுமார் 13 சதவீதம் பேர் மட்​டுமே பட்​ட​தா​ரி​கள், பட்​டம் பெறும் மாணவர்​கள் நாட்​டின் எதிர்​காலத்​தைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​துகிறார்​கள்.

இந்​தியா ஒரு வளரும் நாடு, கல்​வி​யின் வளர்ச்சி நாம் வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக இல்​லை. கன​டா​வில் தகு​தி​யுள்ள இளைஞர்​களில் 64 சதவீதம் பேர் பட்​ட​தா​ரி​களாக உள்​ளனர். அதே நேரத்​தில், தென் கொரியா மற்​றும் ஜப்​பானில் இந்த விகிதம் சுமார் 53 சதவீத​மாக உள்​ளது.

இன்​றைய இளைஞர்​கள் நாட்​டின் எதிர்​காலத் தலை​வர்​களாக உரு​வெடுப்​பார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. இந்​தியா எதிர்​கொள்​ளும் சவால்​களைச் சமாளிப்​ப​தி​லும் முக்​கிய பங்​காற்​று​வார்​கள். மத்​திய மற்​றும் மாநில அரசுகள் உயர்​கல்வி மீது அதிக கவனம் செலுத்தி நிதி ஒதுக்​கீடு செய்​வதை அதி​கரிக்க வேண்​டும்” என்று கூறி​னார்.

விழா​வில் விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் நன்​றி​யுரை வழங்​கி​னார். விஐடி வேலூரின் இணைத் துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மாலிக், விஐடி சென்னை இணைத் துணைவேந்​தர் த.தி​யாக​ராஜன், இயக்​குநர் கே.சத்​தி​ய​நா​ராயணன், விஐடி பதி​வாளர் ஜெய​பாரதி மற்​றும் விஐடி சென்​னை​யின்​ கூடு​தல்​ பதி​வாளர்​ பி.கே.மனோகரன்​ உள்​ளிட்​டோர் கலந்​துகொண்​டனர்​.

<div class="paragraphs"><p>விஐடி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் ராமசாமி, விஐடி நிறுவனர், வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். படம்: எம்.முத்துகணேஷ் </p></div>
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: முதல்வர் விஜய் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in